Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்ஜீனியர் போர்வையில் ஆன்லைன் விபச்சாரம்: வாடிக்கையாளராக நடித்த போலீசார்- 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு கும்பல் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை பிடித்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தைப் பயன் படுத்தி சிலர் ஆன்லைன் விபச்சாரம் செய்வதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரணை செய்த போலீசார், தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். அடுத்தகட்டமாக, அவர்கள் தொடர்பு கொள்ள கொடுத்திருந்த இணையதள முகவரியில் வாடிக்கையாளர்போல தொடர்பு கொண்டனர்.

போலீசாரை உண்மையிலேயே வாடிக்கையாளர் என தவறாக கருதிய விபச்சாரக்கும்பல், பெசன்ட் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள பங்களா வீட்டில் அழகிய இளம் பெண்கள் உள்ளனர் என்று ஆசை காட்டியுள்ளனர். பின்னர் விபசார கும்பல் போலீசாரை ஸ்கார்பியோ காரில் பெசண்ட்நகர் அழைத்து சென்றுள்ளனர்.

அந்த பங்களாவில் இருந்த இரண்டு கொல்கத்தா அழகிகளிடம் கமிஷன் பணத்தை வாங்கிக் கொண்டனர் புரோக்கர்கள். தங்கள் வாடிக்கையாளர் வேஷத்தைக் கலைத்த போலீசார் கேரளாவை சேர்ந்த ஜஸ்டின் முத்தையா, நெல்லையை சேர்ந்த கொம்பையா ஆகிய இரண்டு புரோக்கர்களைக் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரு பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து விபசார அழகிகளை விமானம் மூலம் அழைத்து வந்து ஆடம்பர பங்களாக்களில் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது..

இன்ஜீனியர்கள் என்ற போர்வையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆன் லைன் விபசாரத்துக்கு அவர்கள் பயன்படுத்திய கார், கம்ப்யூட்டர், 3 செல்போன்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+