போலீஸார் மீது ஜட்டியை எறிந்து ரகளை செய்த பெண் வக்கீல்!

பின்னர் தனது செயலுக்காக அந்த வக்கீல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குடித்து விட்டால் குடிகாரர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாகி விடுகிறார்கள். நம்ம ஊரில் குடிகாரர்கள் எப்படியெல்லால் டகால்டி காட்டுவார்கள் என்பதை தனியாக சினிமாப் படமே எடுக்கலாம்.. அம்பூட்டு ரகளைக்காரர்கள் நம்மவர்கள்.
அமெரிக்காவிலும் இப்படித்தான் போலிருக்கிறது. அங்கு ஒரு பெண் வக்கீல், குடிபோதையில், போலீஸார் மீது தனது பேண்டீஸை கழற்றி எறிந்து ஆபாசமாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ப்ரூக்ளினைச் சேர்ந்த ஸ்டெபானி ஹெண்ட்ரிக்ஸ் என்ற பெண் வக்கீல் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார். நல்ல குடிபோதையில் வந்திருந்த அவர் அந்த இடத்தில் நின்றிருந்த போலீஸாருடன் வம்பிழுக்க ஆரம்பித்தார்.
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென ஆவேசத்துடன் தனது பேண்டீஸை கழற்றி அதை போலீஸார் மீது எறிந்தார். மேலும் ஆபாசமாகவும் திட்டினார்.
39 வயதான அந்தப் பெண் வக்கீலின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் தனது செயலுக்காக அவர் போலீஸாரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில்தான் இவரை விட்டு இவரது காதலர் பிரிந்தாராம். இந்த துயரத்தில் இருந்தவருக்கு குடிபோதையில் என்ன செய்கிறோம் என்றுதெரியால் போய் சேட்டை செய்து விட்டாராம்.
குடிபோதையில் பேண்டீஸை தூக்கி போலீஸார் வீசுவதற்கு முன்பு அவர் செய்த செய்கைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாக கூறினார் ஒரு போலீஸார்.












Click it and Unblock the Notifications