நெல்லையில் மீண்டும் டெங்கு ... 8 மாதக் குழந்தை பலி
நெல்லை: நெல்லையில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. 8 மாதக் குழந்தையொன்று மேலப்பாளையம் பகுதியில் உயிரிழந்துள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது நியாஸ், இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகன் வாஜித். இரண்டாவது மகள் ஜபினா.
குழந்தை ஜபினாவுக்கு கடந்த 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தையை உடனடியாக நெல்லையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 21ம் தேதி
குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது. உடனே அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தையின் உடலில் ரத்த அணுக்கள் குறைந்தது.
அடுத்த மூன்று நாட்களில் குழநதையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து 10 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாலை குழந்தை இறந்தது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், முதலில் குழந்தையை அழைத்து சென்ற மருத்துவமனையில் குழந்தையில் உடல் நிலை 3 தினங்களில் மோசமடைந்தது. இதையடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குள்ள டாக்டர்கள் டெங்கு பாதித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதற்கும் சிகிச்சை அளித்தனர். ஆயினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து வி்ட்டது என்றனர்.
கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. தற்போது தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி கொசு புழுக்கள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் டெங்கு பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications