தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கோரி டூவீலர் பிரசாரம்
நெல்லை: உலகத் தமிழ் அமைப்பின் தமிழ்நாடு மாணவர் பேரவையைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எரிக்கப்பட்ட ஈழத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கவும், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கவும் வலியுறுத்தி தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எட்டுநாள் பயணமாக இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து பிரசாரம் செய்ய உள்ளனர்
உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் பேரவையின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், இவர்கள் மாணவர் போராட்டத்தின் போது முன்னனியில் இருந்து பங்காற்றியவர்கள்.தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி பெற 22.ஜூன்2013 முதல் 30.ஜூன்2013 வரை இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வர்.
சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் பேரணி தொடங்கி, சென்னை-காஞ்சிபுரம்-வேலூர்-தர்மபுரி, சேலம்-ஈரோடு-கோவை, பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை, காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம், தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை, திருச்சி-தஞ்சாவூர், கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை.ஆகிய மாவட்டங்களில் நடை பெறுகிறது.
இதில் பங்குகொள்ள ஆர்வமுள்ளவர்கள் eduservice123@gmail என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications