மனைவியுடன் சேர்ந்து வேலைக்காரப் பெண்ணுடன் 'விளையாடிய' மிஸ்டர் பி...!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து வேலைக்காரப் பெண்ணிடம் பாலியல் சேஷ்டைகள் செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.
எம்.பியும், அவரது மனைவியும் சேர்ந்து தன்னிடம் ஏகப்பட்ட சேஷ்டைகளைச் செய்ததாக அந்த வேலைக்காரப் பெண் கூறியுள்ளார். இந்த சம்பவம் 2012ம் ஆண்டு நடந்ததாம். அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததைப் பயன்படுத்தி இப்படி சேட்டை செய்தாராம் எம்.பி.
அந்த சேட்டைக்கார டோரி எம்.பியின் பெயர் வெளியிடப்படவில்லை. மாறாக மிஸ்டர் பி என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.
மது அருந்தலாம்... வா
சம்பந்தப்பட்ட தினத்தன்று இரவு, அந்த வேலைக்காரப் பெண்ணை சம்பந்தப்பட்ட எம்.பி. மது அருந்தலாம் என்று கூறி அழைத்தாராம்.
லவுஞ்சிலேயே வைத்து
இதையடுத்து மது அருந்துவதற்காக அவரும் போயுள்ளார். அப்போது வீட்டு லவுஞ்சிலேயே வைத்து சில்மிஷத்தை ஆரம்பித்தாராம் அந்த எம்.பி.
அந்த இடத்தில்
எம்.பி.யின் மனைவிதான் ரொம்ப மோசம். வேலைக்காரப் பெண்ணின் அந்தரங்க இடத்தில் கையை வைத்து தேய்த்தாராம். எம்.பியோ வேலைக்காரப் பெண்ணின் தொடையில் கை வைத்தாராம்.
மேலே எம்.பி... கீழே மனைவி
எம்.பி. சோபாவில் வேலைக்காரப் பெண்ணுக்கு அருகே நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாராம்.அவருடைய மனைவியோ தரையில் அமர்ந்து வேலைக்காரப் பெண்ணின் இரு கால்களுக்கும் நடுவே உட்கார்ந்து கொண்டாராம்.
ரூமுக்குள் ஓடி தப்பினேன்
எம்.பியும், அவரது மனைவியும் செய்த சேட்டைகளால் பயந்து போன வேலைக்காரப் பெண் அங்கிருந்த ரூமுக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டாராம்.
ஒத்துழைக்காததால் டிஸ்மிஸ்
தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அந்த வேலைக்காரப் பெண்ணை சம்பந்தமில்லாத காரணங்களைக் கூறி டிஸ்மிஸ் செய்து விட்டனராம் எம்.பியும், அவரது மனைவியும்.
அதெல்லாம் சும்மாங்க...
இதுகுறித்து சம்பந்தப்பட்ட எம்.பி. கருத்து கூறுகையில், இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மெய்யாலுமா துரை...??