Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணப்பெண்கள் 350 பேருக்கு கற்பு பரிசோதனை:- ம. பி.யில் கிளம்பும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் இலவச திருமணத்திற்காக வந்த 350க்கும் மேற்பட்ட ஆதிவாசி பெண்களின் கன்னி்த் தன்மையை சோதிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெடுல் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் ‘முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் மூலம் இலவசத் திருமணத்தை வெள்ளிக்கிழமை நடத்தியது. இதில் ஆதிவாசி பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் கன்னித்தன்மையுடன் உள்ளனரா அல்லது கர்ப்பிணியாக உள்ளனரா? என மருத்துவ சோதனை நடத்த அரசு அதிகாரிகளே உத்தரவிட்டதாக 90 ஆதிவாசி பெண்கள் மாவட்ட நிர்வாகம் மீது புகார் கூறினர்.

இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பின. இதனையடுத்து இச்சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க மாவட்ட கலெக்டர் ராஜேஸ் பிரசாத் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு, அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+