அத்வானி ராஜினாமாப் படலம்... பாகம் 8 - 'சீன்' 3!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 8 ஆண்டுகளில் இது 3வது முறையாகும்.
நீண்ட வெடிய அரசியல் வரலாறு கொண்டவர் அத்வானி. போர்க்குணம் படைத்த தலைவர்களில் ஒருவர். வாஜ்பாயியுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்.
துணைப் பிரதமர் பதவி வரை வந்தவர். ஆனால் பிரதமர் பதவிதான் இவருக்குக் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போய் விட்டது. இந்த ஏமாற்றத்தில் இருந்து வரும் அத்வானி நேற்று பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் பதவிகளை ராஜினாம் செய்வது கடந்த 8 வருடங்களில் இது 3வது முறையாகும்.

ஜின்னா பேச்சுக்காக
கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தான் போயிருந்தபோது முகம்மது அலி ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்புகளின் கண்டனங்ளைச் சம்பாதித்தார். இதையடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

4 நாட்களில் ரிட்டர்ன்
இதனால் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் தலைவர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து 4 நாட்களில் மீண்டும் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.

மீண்டும் ராஜினாமா - ராஜ்நாத்சிங் புதிய தலைவர்
ஆனால் அதே ஆண்டுடிசம்பர் மாதம் ஜின்னா சர்ச்சை மீண்டும் வெடிக்கவே மறுபடியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முறை அவர் சமாதானமாகவில்லை. மாறாக ராஜ்நாத் சிங்கைத் தலைவராக்கினர்.

தற்போது 3வது முறையாக
இந்த நிலையில் தற்போது நரேந்திர மோடியைக் காரணமாக வைத்து மீண்டும் மனக்கசப்புக்கு ஆளான அத்வானி பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications