செயற்குழுவைக் கூட்டுகிறது பாமக - ஜி.கே.மணி அறிவிப்பு
சென்னை: பாமகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் ஜூன் 21ல் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் வருகிற ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. சென்னை தியாகராயர் பேருந்து நிலையத்தை அடுத்த மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகரன் திருமண அரங்கில் இக் கூட்டம் நடைபெறுகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications