18ம் தேதி ரூ. 800 கோடி பிணையப் பத்திரங்களை விற்கும் தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூ. 800 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ரூ. 800 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் மத்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.
காலை 10.30 மணியில் இருந்து நண்பகல் 12.00 மணிக்குள் ஏலக் கேட்புகள் நடைபெறும். காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் போட்டியற்ற ஏலக் கேட்புகள் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில், மின்னணு படிவத்தை வரும் 18ம் தேதி அன்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications