காஷ்மீரில் கீர் பவானி கோவில் பூஜை செய்ய பூசாரிகளுக்கு உதவிய முஸ்லிம்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள கீர் பவானி கோவிலில் பூஜை நடத்த பூசாரிகளுக்கு முஸ்லிம்கள் உதவி செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லாவில் உள்ளது கீர் பவானி கோவில். அந்த கோவிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. திருவிழாவின்போது பூஜைகள் நடத்த சுமார் 35,000 பூசாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து அங்கு வந்தனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் முஸ்லீம்கள் கோவிலுக்கு வெளியே நின்று பூசாரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் பூஜை செய்யத் தேவைப்படும் விளக்குகள், பூ, பழம் உள்ளிட்டவை விற்கும் தற்காலிக கடைகளை முஸ்லிம்கள் அமைத்து வியாபாரம் செய்தனர். சில பூசாரிகள் முஸ்லீம்களின் வீட்டில் தங்கி கோவிலில் பூஜை செய்தனர். கல்லூரி செல்லும் முஸ்லிம் மாணவர்கள் பூசாரிகளுக்கு உதவியாக இருந்தனர். சிலர் தாமாக முன்வந்து பக்தர்களுக்கு நீரும், பழரசமும் வழங்கினர்.
ஆனால் அந்த கோவிலுக்கு சென்ற ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக பூசாரிகள் கோஷமிட்டனர். ஜம்முவில் உள்ள சில காலனிகளில் ஏற்படும் மின்தடைக்கு எதிராக கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications