தமிழகம்- 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

நேற்று முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொண்டார். அதன்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பிற்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. அப்துல்ரகீம் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். புதிய அமைச்சர்கள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.45 மணிக்கு பதவி ஏற்றனர்.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இரு அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சண்முகநாதன், சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழக அமைச்சராக பதவியேற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாட்டு இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டோர் மற்றும் வக்பு உள்ளிட்ட சிறுபான்மையினர் துறை எஸ்.அப்துல்ரகீமிடம் ஒப்படைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications