இந்திய வீரர்களைப் பாதுகாக்க 3 பாடிகார்டுகளை பிடித்துப் போட்ட பிசிசிஐ!
லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆடி வரும் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்காக பாடிகார்டுகளை அமர்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. அரை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதவுள்ளது.
ஜூன் 20ம் தேதி கார்டிப் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

3 பாடிகார்டுகள்
இந்த நிலையில் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்காக 3 வெளிநாட்டு பாடிகார்டுகளை இந்தியா அமர்த்தியுள்ளதாம்.

கண்கொத்திப் பாம்பாக
மேலும் இந்திய வீரர்களின் நடமாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைனஸ் - வெதர்லி - கோல்ட்
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், தென் ஆப்பிரிக்காவின் டைனஸ், ஆஸ்திரேலியாவின் கிரெக் வெதர்லி ஆகிய இரு பாடிகார்டுகளை இந்திய கிரி்ககெட் வாரியம் பாதுகாப்புக்காக அமர்த்தியுள்ளது. மேலும், ஐசிசி சார்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த கைல் கோல்ட் எனற பாடிகார்டும் அளிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பாதிப்பும் கிடையாது
வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும், இடையூறும் ஏற்படாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

மூச்சா போனாக் கூட வருவாங்களோ
இந்திய வீரர்கள் எங்கு போனாலும் இவர்கள் கூடவே இருக்கிறார்கள். பிட்ச், நெட் பயி்ற்சி, உடற்பயிற்சி, பிரஸ் மீட், டின்னர், ஷாப்பிங் என ஒரு இடத்தையும் விடுவதில்லையாம்.

ராத்திரி 10.30 மணிக்கு மேலே
அதேபோல இரவு 10.30 மணிக்கு மேல் வீரர்கள் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. கெஸ்ட்களும் போட்டி தினத்தின்போது அனுமதிக்கப்படுவதில்லை.

போன் பேசக் கூடாதப்பா
அதேபோல போட்டிகளின்போது வீரர்கள் செல்போன்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications