உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 40 தமிழர்கள் மீட்பு… எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை
கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழக யாத்ரீகர்கள் 40 மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்டு, தமிழகத்திற்கு அழைத்து வரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில், குறிப்பாக உத்தரகாண்டில் ஆன்மீகச் சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் மழைவெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைபடி, தமிழகத்தைச் சேர்ந்த 399 பேர், உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பினர்
இவர்களில் ஆன்மீகச் சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புண்ணியத்தலங்களை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாகவும், மழை காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பல சிரமங்களைக் கடந்து சென்னை திரும்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் 36 பேர், பல்வேறு சிரமங்களுக்கு இடையே டெல்லிக்கு சென்றுள்ளனர். ரிஷிகேஷ் சென்ற போது, மழை வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டாலும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளால் தாங்கள் பத்திரமாக திரும்ப முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

359 தமிழர்கள்
உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் இன்னும் 359 தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உயர் மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு டேராடூனுக்கு அனுப்பியுள்ளது.
பயணிகள் குறித்த தகவல்களை அறிய டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் நிவாரண ஆணையர் அலுவலகத்திலும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பயணிகள் அனைவரும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களது உறவினர்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் கதி
இதனிடையே, கேதர்நாத் கோயிலுக்கு சொந்தமான 90 தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், இதில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாததால், பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

60000 பேரை காணவில்லை
இமாலயா சுனாமியில் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 60000 பேரைக் காணவில்லை என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுமார் 60 ஆயிரம் பேர் புனித யாத்திரை சென்றதாகவும், தம்தா என்னும் பகுதியில் மட்டும் 25 ஆயிரம் பேர் தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 150 பேர்தான் என்று முதலில் கூறப்பட்டாலும் இப்போது பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீட்புப்பணிகள் தீவிரம்
உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலில், விமானப்படைக்கு சொந்தமான 20 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மற்றும் கோவிந்த் காட் பகுதிகளில் சிக்கித் தவித்த, 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள், தற்காலிக முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications