ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை?: இது தான் பாமகவின் தீர்மானம்!

பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு, பாமக எம்எல்ஏக்கள் மா.கலையரசு, கணேஷ் குமார் உட்பட 550 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை, தேர்தலை புறக்கணிப்பது என்பது தான்.
அந்தத் தீர்மானத்தின் முழு விவரம்:
தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மரக்காணம் கலவரத்திற்கு நீதிகேட்டு போராடிய ராமதாஸை ஜெயலலிதா அரசு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பாமகவினர் மீது பொய் வழக்குப் போட்டு குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவதாகக் கூறியும், சிறையில் இருக்கும் பாமக எம்எல்ஏ ஜெ.குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications