உத்தரகண்டில் பறந்து, பறந்து, ஓடி, ஓடி யாத்ரீகர்களை மீட்கும் ராணுவத்தினர்
டேராடூன்: வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உத்தரகண்ட் வரலாறு காணாத அளவு சேதம் அடைந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த மாநிலத்தில் உள்ள சாலைகள், பாலங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

பிரார்த்தனை
வெள்ளத்தில் சிக்கியவர்களுக்காக அலகாபாத்தில் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள்.

ஆனந்த கண்ணீர்
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த யாத்ரீகர்கள் இந்தூர் விமான நிலையத்தில் உறவினர்களை பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர் சிந்துகின்றனர்.

ஹர்பஜன் சிங்
ஹேம்குந்த் சாகிப் கோவிலுக்கு சென்று சிக்கிய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ராஜ்நாத் சிங்
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

மூதாட்டிகள்
சமோலி மாவட்டம் ஹேம்குந்தில் சிக்கித் தவித்த மூதாட்டிகளை ராணுவத்தினர் மீட்டனர்.

மருத்துவ உதவி
ஹேம்குந்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் மருத்துவ உதவி அளிக்கும் ராணுவத்தினர்.

மீட்பு
ஹேம்குந்தில் இருந்து ஒரு பெண்ணை மீட்டு வந்த ராணுவத்தினர்.

முதியவர்
ஹேம்குந்த் முகாமில் சிகிச்சை பெறும் முதியவர்.

உணவு
ஹேம்குந்த் முகாமில் உள்ள யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கும் ராணுவத்தினர்.

மீட்பு ஹெலிகாப்டர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹேம்குந்தில் இருந்து யாத்ரீகர்களை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவத்தினர்.












Click it and Unblock the Notifications