கபினி அணையிலிருந்து திடீரென தமிழகத்திற்கு 10,000 கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது பெய்யும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று (25ஆம் தேதி) திறக்கப்பட்டது.
தற்போது கபினி அணைக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த அடி 2,282. தற்போது 2,277 அடி நீர் இருப்பதால் தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்
இதனிடையே மேட்டூர் அணியின் நீர் இருப்பு மூன்று டி.எம்.சி அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு குறைந்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தது. தற்போது அணையில் மூன்று டி.எம்.சி அளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதற்கு முன், கடந்த 1989-ம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2.89 டி.எம்.சி. யாக இருந்தது. அதற்கு பின், தற்போதுதான் இந்த அளவிற்கு நீர் இருப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கபிணியில் அணையில் இருந்து 10000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications