மும்பை தலோஜா சிறையில் தாதா அபு சலீம் மீது துப்பாக்கிச்சூடு

1993ம் ஆண்டு மும்பையில் நடநத் குண்டுவெடிப்பில் தொடர்புடைவன் தாதா தாவூத் இப்ராஹீமின் கூட்டாளி தாதா அபு சலீம். தலைமறைவாக இருந்த அவன் கடந்த 2002ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடிகை மோனிகா பேடியுடன் கைது செய்யப்பட்டான். பின்னர் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்.
அவன் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டான். அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவன் தாக்கப்பட்டான். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவன் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டான். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு கொலை வழக்கில் சிறையில் உள்ள தேவேந்திர ஜகதாப் என்பவர் சலீமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சலீமின் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவன் நலமாக உள்ளான்.












Click it and Unblock the Notifications