இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்: குற்றப் பத்திரிக்கையில் ஐபி இயக்குநர் பெயர்: சிபிஐ- உள்துறை மோதல்
டெல்லி: இளம் பெண் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்திரகுமாரின் பெயரை சேர்ப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ இடையே மோதல் உருவாகியுள்ளது.
கடந்த 20004ம் ஆண்டு அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட ஐந்து பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இஷ்ரத் ஜகானும், அவருடன் இருந்தவர்களும் ஏன் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும் முயற்சியில் சிபிஐ தீவிரம் காட்டுமாறும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இஷ்ரத் வழக்கில் ஐபி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் சிபிஐ அதிகாரிகளால் 2வதுமுறையாக விசாரிக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயரை சேர்த்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் நினைத்துள்ள நிலையில், அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே ராஜேந்திர குமாரின் பெயரை சேர்க்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் ஜூலை 4ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications