பெண்களை குறிவைக்கும் இதயநோய்: ஆய்வில் தகவல்
டெல்லி: மாறிவரும் பழக்க வழக்கங்களால் பெண்களை இதய நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் இதய நோய் வராது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த கணக்கெடுப்பில் மாறிவரும் பழக்க வழக்கங்களால் இந்திய பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறை
மாறி வரும் பழக்க வழக்கங்களால் பெண்களுக்கு போதிய அளவில் ஈஸ்டோரஜன் சுரப்பதில்லை. இதனால் இளம் பெண்களை இதய நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று 65 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகளில் இதய நோயாளிகள் அதிகரிப்பு
கடந்த 5 ஆண்டுகளில் இதய நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 16 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று 55 சதவீத இதய நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருபதிலும் இதய நோய்
20 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்று 41 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோய் என்றால்?
இந்திய பெண்களுக்கு இதய நோய்கள் பற்றி தெரிவதில்லை என்று 83 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வதால் தான் பல பெண்கள் இறக்கின்றனர் என்று 76 சதவீத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்குப் போகும் பெண்களை அதிகம் தாக்கும்
வீட்டில் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடுகையில் வேலைக்குப் போகும் பெண்களை இதய நோய் அதிகம் தாக்குகிறதாம்.












Click it and Unblock the Notifications