பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு: என்எல்சி தொழிலாளர்கள் நாளை உண்ணாவிரதம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது உறுதி என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து வாயிற்கூட்டங்கள் நடத்தினர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இன்று காலையில் தொழிலாளர்கள் தொழிற்சாலை பகுதிகளிலும், அதைத் தொடர்ந்து அலுவலக பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உச்சகட்டமாக நாளை காலை 6 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தீவிரமடையும் போரட்டம்
ஜூலை 3ம் தேதி இரவு முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும் துவங்குகின்றனர். போராட்டம் தீவிரமடைவதைத் தொடர்ந்து நெய்வேலியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் நேற்று நடந்தது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications