2010ல் 35, 2011ல் 7, 2012ல் 18... இது ஆந்திராவில் பசி, பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கடந்த ஆண்டு மட்டும் ஆந்திராவில் 18பேர் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே கடந்த ஆண்டு பட்டினிச் சாவு நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. அதில் ஆந்திராவில் மட்டும் கடந்த ஆண்உ 18 பசியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் கணக்குப்படி, ஹைதராபாத்தில் மட்டும் 6 பேர் பசியால் இறந்திருக்கிறார்களாம். ஆனால், ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் எந்த பட்டினிச்சாவும் கடந்த சில ஆண்டுகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையா? பொய்யா?

உண்மையா? பொய்யா?

ஆந்திர அரசாங்கமோ இதெல்லாம் பொய் கணக்கு, அப்படி பட்டினிச்சாவு எதுவும் இல்லை என மறுத்து வருகிறது.

மாறி வரும் பட்டினிச் சாவுகள்...

மாறி வரும் பட்டினிச் சாவுகள்...

தேசிய குற்றப்பதிவு ஆணையக் கணக்கீட்டின் படி, 2011ல் ஏழு பேரும், 2010ல் 35 பேரும் ஆந்திராவில் பட்டினிச் சாவு அடைந்ததாக ஆதாரம் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் மட்டும் 187 பேர் ஆந்திராவில் பட்டினிச்சாவு அடைந்ததாக பதிவாகியுள்ளது.

என் கவனத்திற்கு வரவில்லை...

என் கவனத்திற்கு வரவில்லை...

ஆனால், ஆந்திர நிதியமைச்சர் ரகுவீர ரெட்டியோ இதை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் மாநிலத்தில் பட்டினி சாவிற்கு வாய்ப்பேயில்லை. பட்டினிச் சாவுகள் குறித்து இதுவரை எதுவும் என் கவனத்திற்கு வரவில்லை' என தெரிவித்துள்ளார்.

நிறைய திட்டங்கள் உள்ளன...

நிறைய திட்டங்கள் உள்ளன...

மேலும், ‘அப்படியே இந்தச் செய்தி உண்மையானால், பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். ஆனால், அவ்வாறு பட்டினிச் சாவுகள் ஏற்படா வண்ணம் ஏற்கனவே அரசு நிறைய திட்டங்களாஇ அமுல் படுத்தியுள்ளது ‘என்றார்.

பட்டினிச் சாவு என்றால்...

பட்டினிச் சாவு என்றால்...

பிரேதப் பரிசோதனையில் இறந்த ஒருவரின் வயிற்றில், கடந்த இரண்டு வாரங்களாக உணவு உட்கொள்ளாததற்கான ஆதாரம் இருந்தால், அது பட்டினிச்சாவாக கணக்கில் கொள்ளப்படும். மேலும், இத்தகைய பட்டினிச் சாவுகளுக்கு அம்மாநில கலெக்டர்களே பொறுப்பு என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு.

கண்டனக் குரல்கள்...

கண்டனக் குரல்கள்...

ஆந்திராவில் பட்டினிச்சாவுகள் இல்லை என அரசு மறுத்த போதும், சமூக ஆர்வலர்கள் ‘இது உண்மையென்றால் இதைவிட கேவலமான நிர்வாகம் வேறொன்றுமில்லை' என கருத்து தெரிவித்த வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+