உடைந்த பனிச்சிகரங்கள்.. உருக்குலைந்த கேதர்நாத்.. நாசாவின் செயற்கைக் கோள் படங்கள்!
டேராடூன்: இப்படியுமா உருக்குலைந்து போகும்? இத்தனை ஆயிரம் பேரா பலி? என உறைய வைக்கும் கேள்விகளுடன் சரித்திர சோகமாக வரலாற்றுப் பக்கங்களில் இணைந்து கொண்டிருக்கிறது உத்தர்காண்ட் வெள்ள சோகம்! இயற்கையை தன் விருப்பத்துக்கு வளைத்த மனித தவறுகளின் விளைவுதான் இந்தப் பெரும்சோகம் என்பதை பட்ட பின்பாவது புரிந்து கொள்வோமா என தெரியவில்லை..
உத்தர்காண்ட் உருக்குலைந்து போவதற்கு முன்பும் அதன் பின்புமாக ஜூன் 23-ந் தேதியன்று அமெரிக்காவின் நாசா மையம் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக கேதார்நாத் பள்ளத்தாக்கில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவம் பற்றிய புகைப்படங்கள், குறிப்பாக பனிச்சிகரங்கள் உடைந்து ஏரியிலும் மந்தாகினி ஆற்றிலும் விழுந்திருப்பதை உணர்த்தும் புகைப்படங்கள் நிலைமையின் விபரீதத்தை வெளிப்படுத்துகிறது.

அடித்துச் செல்லப்பட்ட ரம்பாரா
இந்த முதல் படம் கெளரிகுண்ட் - கேதார்நாத் இடையேயான 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடையே இருக்கும் ரம்பாரா கிராமம்.. இந்தக் கிராமத்தில் பெரும்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை இப்படம் விவரிக்கிறது.

புதையுண்ட ரம்பாரா
நிலச்சரிவில் சிக்கிய ரம்பாரா கிராமம் எதிர்கொண்டிருக்கும் சேதத்தை விவரிக்கும் படம் இது

காணாமல் போன கேதர்நாத்
இதுதான் கேதார்நாத்.. வெள்ளத்துக்கு முன்பு விரிவடைந்திருந்த கேதார்நாத் நகரம்.. பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரைந்து காணாமலேயே போயிருக்கிறது..

கைவிடப்பட்ட கேதார்நாத்
பெருவெள்ளத்தில் முற்று முழுதாக கேதார்நாத் நகரமே அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது..

உடைந்த பனிச்சிகரங்கள்
கேதார்நாத் கோயிலுக்குப் பின்புறம் இருக்கக் கூடிய கேதார்நாத் பனிச்சிகரத்தின் சர்பாரி, கம்பேனியன் சிகரங்கள் உடைந்து மந்தாகினி ஆற்றில் விழுந்ததை குறிப்பிடும் புகைப்படங்கள் இவை

நிலைகுலைந்த கெளரிகுண்ட்
கேதார்நாத்தை சென்றடைவதற்கான முக்கியமான இடம் கெளரிகுண்ட். இதுவரை வாகனத்தில் செல்ல முடியும். பின்னர் 14 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்தோ, டோலியிலோ செல்ல முடியும். கெளரிகுண்ட்டுக்கு ஏற்பட்ட கொடுமை இது..
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications