மும்பையில் 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி பணம் பறிமுதல்: 50 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Rs 2,500 crore seized from four trucks in Mumbai
மும்பை: மும்பையில் 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 ரொக்கத்தை வருமானவரித் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர்.

மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு வெளியே 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். மொத்தம் 150 சூட்கேஸ்களில் பணம் இருந்தது. ரொக்கம் தவிர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பணம் மற்றும் நகைகள் குஜராத் ரயிலில் பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருந்தன. இந்த சம்பவம் குறித்து இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு மும்பை பால்லர்ட் எஸ்டேட்டில் உள்ள சிந்தியா ஹவுஸ் கட்டிடத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டது. சிந்தியா ஹவுஸில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+