முஸ்லீம் மருத்துவர்களை நிராகரியுங்கள்... கருத்தடை வேண்டாம்: சிங்களவர்களுக்கு அறிவுரை!
கொழும்பு: சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுபல சேனா என்ற சிங்கள அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவுறுத்தி உள்ளார்.
கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியதாவது: , "இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு இலங்கையை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே முஸ்லிம் வர்த்தகத்தையும், முஸ்லிம் மருத்துவர்களையு சிங்களவர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த சிங்களவர்கள். இனஅழிப்பு வேலையில் ஈடுபட்டு கொன்று குவித்து வருகின்றனர். இப்போது முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications