என்.எல்.சி. பங்கு: தமிழக அரசின் கோரிக்கை…. மத்திய அரசு 'செபி'க்கு பரிந்துரை!
டெல்லி: என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான என்.எல்.சி. யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து, அமைச்சரவையிலும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் என்.எல்.சி. பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமே விற்கலாம் என்றும், அதனை தனியார் நிறுவனத்திடம் விற்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அவ்வாறு விற்க முடியுமா என 'செபி'யின் கருத்தை கேட்டுள்ளதாகவும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் பிரதமருக்கு அந்த கடிதத்தினை எழுதியுள்ளார். எனினும் என்.எல்.சி பங்குகளை தமிழகத்திற்கு கேட்டுள்ளதாக செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். எனவே முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மத்திய அரசு கவனமுடன் பரிசீலித்து வருவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications