டாடா சொன்ன அட்வைஸ் என்ன? இந்திய விமான சேவை சாத்தியமா? விவரிக்கிறார் ஏர் ஏசியா டோனி பெர்னாண்டஸ்
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் மலேசியாவில் ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை தொடங்க இருக்கிறது. ஏர் ஏசியாவின் நிறுவனர் மலேசியாவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஏர் ஏசியாவின் இந்திய தலைவரான மிட்டு சாண்டில்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டோனி பெர்னாண்டஸ் அளித்த நேர்காணலின் சுருக்க வடிவம்:

குறைவான கட்டணம்
சரியான கட்டண கட்டமைப்பை நாங்கள் வைத்திருக்கவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம். மலேசியா, தாய்லாந்து, லாவோஸில் இருந்து இந்தியா வேறுபட்ட ஒரு நாடு அல்ல. இந்தியாவில் ஏற்கெனவே நாங்கள் எங்களது விமான சேவையை இயக்கி இருக்கிறோம். இதனால் இங்கே என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். உங்களிடம் 2 விமானங்கள் இருக்கும் போது ஒரு சரியான கட்டண கட்டமைப்பை வைத்திருக்க முடியாது. ஆனால் 11 அல்லது 12 விமானங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என யோசியுங்கள்..

ரத்தன் டாடாவின் அறிவுரை என்ன?
என்னைப் பொறுத்தவரையில் மலேசியாவில் எப்படி வெற்றி பெற்றேன் என்ற அடிப்படையை மாநில அரசுகளிடம் விளக்குவேன். விமான விலை எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் சேவையை அதிகப்படுத்துவதன் மூலம் எப்படி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதை விளக்குவேன்.
ரத்தன் டாடா எனக்கு என்ன அறிவுரை கூறினார் என்பதை நான் புத்தகம் எழுதும்போது வெளிப்படுத்துவேன். மும்பையிலும் ஹைதராபாத்திலும் விமானநிலைய வரி கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.

ஆசியாவிலேயே அதிக ஊதியம்
ஆசியாவிலேயே ஏர் ஏசியா விமான நிறுவனத்தில்தான் கூடுதல் ஊதியம் கொடுக்கப்படுகிறது. அப்போதுதான் விமானத்தின் மீது விமானிகளுக்கு அக்கறை ஏற்படும். எரிபொருளை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆயிரம் முறை விமானிகளிடம் சொன்னாலும் அது நடைமுறைக்கு வராது. 40% எரிபொருள் விலை என்பது 50% ஆக வேண்டுமானால் உயரலாம். அதனால்தான் விமானிகளுக்கு இயல்பாகவே அக்கறையை உருவாக்கவே கூடுதல் ஊதியம் கொடுக்கிறோம். இதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை எனில் இந்த நிறுவனத்தை அவர்கள் நேசிக்கவில்லை என அர்த்தம்.

சீரான திட்டமிட்ட சேவை
அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு 3 நாட்களில் எங்களது விமான சேவை தொடங்கியது. இந்தியாவை விட மோசமான சந்தைகளை எல்லாம் எதிர்கொண்டுவிட்டோம். இப்போதுதான் இந்திய சந்தை எங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மக்கள் இருக்கின்றனர். பலரும் இந்தியாவுக்கு வருகை தரவே விரும்புகின்றனர். இது எளிதானது ஒன்று அல்ல..
கிங்ஸ்பிஸர் நிறுவனமானது குறைவான கட்டணத்தில் தொடங்கினாலும் பின்னர் ஏர் டெக்கானை விலைக்கு வாங்கியது. அது எப்படி எனில் கெட்ட பிரியாணியைப் போன்றது. எங்களைப் பொறுத்தவரை ஏர்பஸ் ஏ320 விமானம்தான்.. 180 இருக்கைகள்.. அதிகபட்சம் பறக்கும் நேரம் 4 மணி நேரம்தான்.. இதை தொடர்ந்து நாங்கள் கடைபிடித்து வருவதால் இயங்க முடிகிறது என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications