மயிலுக்கு விஷம்.. 11 மயில்கள் பலி.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள இ. மலம்பட்டி கிராமத்தில் விஷம் வைத்து பல மயில்கள் கொல்லப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
மயில் நமது தேசியப் பறவை. அதை வேட்டையாடுவது, வளர்ப்பது உள்ளிட்ட செயல்கள் குற்றச் செயலாகும். இந்த நிலையில் ஆங்காங்கு மயில்களைக் கொல்வது அதிகரித்து வருகிறது. பயிர்களுக்கு அது சேதத்தை ஏற்படுத்துவதால் விஷம் வைத்துக் கொன்று விடுகிறார்கள்.
இந்த நிலையில் இ.மலம்பட்டி கிராமத்தில் மயில்கள் சில விஷம் வைத்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகப் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன. இவை அருகில் உள்ள வயல்களில் புகுந்து நெற்கதிர்களை கொத்திக் குதறி விடுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சில மயில்கள் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் மாணவர்கள் கூறினர். அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
11 மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது நெல்லில் விஷம் கலந்து கொடுத்து மயில்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து யார் விஷம் கலந்த நெல்லை போட்டது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications