இளவரசன் மரணம் எதிரொலி... சென்னையிலேயே தங்கியுள்ள திவ்யா

Subscribe to Oneindia Tamil

Divya stays back in Chennai after Ilavarasan's death
தர்மபுரி: தான் காதலித்து மணம் புரிந்த இளவரன் மரணச் செய்தி திவ்யா எந்த அளவில் பாதித்துள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் அவரும், அவரது தாயாரும் பாதுகாப்பு கருதி சென்னையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்மபுரி கலவரத்திற்கு வித்திட்ட திருமணத்தின் மூலம் இல்லற வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் திவ்யாவும், இளவரசனும். ஆனால் திடீரென தடம் மாறிய திவ்யாவின் முடிவை தாங்க முடியாமல் இளவரசனின் உயிர் போய் விட்டது.

இளவரசன் மரணச் செய்தி திவ்யாவை எந்த வகையில் பாதித்துள்ளது என்பது குறித்து அறிய முடியவில்லை. நேற்று முன்தினம்தான் ஹேபியஸ் கார்பஸ் மனுவை வாபஸ் பெறுவதாக திவ்யாவின் தாயார் உயர்நீதிமன்றத்தில் அறிவித்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு தருவதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இளவரசன் பிணமாகக் கிடந்தார் தர்மபுரி ரயில் தண்டவாளத்தில். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விசாரணை முடிந்து நேற்று தங்களது ஊர் திரும்புவதாக இருந்தனர் திவ்யாவும், தேன்மொழியும். ஆனால் இளவரசன் மரணச் செய்தியால் அவர்கள் சென்னையிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+