ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை... வழக்குப் பதிவு செய்தது ரயில்வே போலீஸ்
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி திவ்யாவின் கணவரான இளவரசன், தனது காதல் மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த நிலையில் அவரது உடல் நேற்று காலை தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரி அருகே ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
மூளை சிதறிக் கிடந்தது. அருகே மது பாட்டில், அவரது பேக், அதில் 2 கடிதங்கள் இருந்தன. இது தற்கொலையா அல்லது கொலையா என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தர்மபுரி ரயில்வே போலீஸார் இதை தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரயில் முன்பு பாய்ந்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று மதியம் அந்தப் பகுதியைக் கடந்த ரயிலிலிருந்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் வந்ததாம். அதன் அடிப்படையில் தற்கொலை வழக்கை போலீஸார் பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications