இளவரசன் மரணத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை - சொல்கிறார் அன்புமணி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அன்புமணி கூறுகையில், இளவரசன் மரணம் மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழப்பு தொடர்பாக மிகவும் வருந்துகிறோம்.
இளவரசன் - திவ்யா பிரச்சனை இருவரின் தனிப்பட்ட பிரச்னையாகும். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த விவகாரத்துக்கும் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இளவரசன் மரணம் கொலையா, தற்கொலையா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் அன்புமணி.
திவ்யா விவகாரத்தில் பாமகவுக்குத் தொடர்பு இல்லை என்று கூறுகிறார் அன்புமணி. ஆனால் திவ்யாவுக்காக ஆஜரான வக்கீல் கே.பாலு, பாமகவுடன் தொடர்புடையவர் என்பதை அன்புமணி மறந்து விட்டாரோ...












Click it and Unblock the Notifications