நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால் மின் உற்பத்தி குறைந்து வரும் அபாயம்
நெய்வேலி: தொடரும் என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால், மின் உற்பத்தி குறைந்துள்ளது. மழையின் காரணமாக குகைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், இன்னும் பணிமுடக்கம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கடந்த 3ம் தேதி மத்திய அரசின் 5 சதவீத பங்கு விறபனையை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட் அதடையை மீறி போராட்டத்தில் குதித்தனர் என்.எல்.சி தொழிலாளர்கள். வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த 27 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் மட்டும் பாதுகாப்புடன் பணிக்கு சென்று வருகிறார்கள்.
ஏற்கனவே, பெய்த மழையின் காரணமாக, சுரங்கங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே மழை பெய்ய தொடங்கினால், சுரங்கப்பணிகள் முற்றிலும் முடங்க கூடிய அபாய நிலையில் உள்ளது.
தற்போது, வெறும் 4 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், மின் உற்பத்தி அளவானது 3 அனல் மின்நிலையங்களையும் சேர்த்து முழு அளவான 2490 மெகாவாட் என்கிற நிலையில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கிவிட்டது. இது கடந்த 5-ந்தேதி மாலை நிலவரப்படி 2 ஆயிரத்து 153 மெகாவாட் என்கிற நிலையில் மின் உற்பத்தி இருந்தது.நேற்றைய காலை 6 மணி நிலவரப்படி அனல் மின்நிலையம் 1-ல் அதன் உற்பத்தி அளவான 600 மெகாவாட் என்பது மிகவும் குறைந்து 360 மெகாவாட் என்கிற நிலைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டது.
நேற்று மின் உற்பத்தி 2 ஆயிரத்து 73 என்கிற நிலையில் இருந்தது. இது வழக்கமான அளவை காட்டிலும் 417 மெகாவாட் மின் உற்பத்தி குறைவு ஆகும். அனல்மின் நிலையம் 1-ல் முழுஅளவான 600 மெகாவாட்டிற்கு பதிலாக 344 மெகாவாட் அளவும், அனல்மின் நிலையம் -2ல் மொத்த அளவான 1470 மெகாவாட் அளவில் இருந்து 1309 மெகாவாட் உற்பத்தியும், அனல்மின் நிலையம்-1 விரிவாக்க பகுதியில் முழு அளவான 420 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியும் உள்ளது.
இந்நிலையில் போராட்டம் நீடித்தால், மின் உற்பத்தி நிச்சயம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications