பைலட் பிரவீண் வீட்டில் வைகோ அஞ்சலி- தாயாருக்கு ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: உத்தரகாண்ட் மாநில மீட்புப் பணியில் ஈடுபட்டபோது விபத்தில் பலியான விமானி பிரவீண் இல்லத்தில் வைகோ அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இன்று காலைபிரவீண் இல்லத்திற்கு சென்ற வைகோ விமானி பிரவீண் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரவீண் குடும்பத்தாருடன் ஆறுதல் தெரிவித்து பேசினார். பிரவீணின் தாயாருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

வைகோவுடன் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகுசுந்தரம், மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசாமி, மாநில மாநில மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று பிரவீணின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications