சான் பிரான்சிஸ்கோவில் விமானம் விழுந்து விபத்து- 2 பேர் பலி, 180 பேர் காயம்
சான் பிரான்சிஸ்கோ: ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது நொறுங்கியது. இதில் 2 பேர் பலியானார்கள். 180 பேர் காயமடைந்தனர்.
தரையிறங்கிய வேகத்தில் விமானம் நொறுங்கி துண்டானது. உடனடியாக தீயும் பிடித்துக் கொண்டது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விமானம் சியோலிலிருந்து வந்ததாகும். சனிக்கிழமையன்று சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகி விட்டது. விழுந்து உடைந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து ஏற்பட்டதும் விமானத்தின் வால் பகுதி தனியாக பிய்த்துக் கொண்டு போய் விட்டது.
விபத்தில் 2 பேர் பலியானார்கள். 180 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications