முகாமில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற 17 இலங்கை தமிழர்கள் கைது
காஞ்சிபுரம்: தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் போலீசில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தனர். அவர்களில் வழக்குகளில் தொடர்புடையவர்களை சிறப்பு முகாமிலும் மற்றவர்களை திறந்தவெளி முகாம்களிலும் அரசு தங்கவைத்துள்ளது.
இவர்களில் பலர் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கோ, உறவினர்கள் உள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ அடிக்கடி தப்பிச் செல்வதும் காவல்துறை அவர்களை பிடிப்பதும் தொடர்கதையாகிவருகிறது.
இதேபோல் காஞ்சபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேரை காவல்துறை பிடித்துள்ளது. பிடிபட்டவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் திறந்தவெளி முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும், வாலாஜாபாத்தை சேர்ந்த ஜோதிராஜா என்ற ஏஜெண்ட் மூலம் இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட இலங்கை தமிழர்களை அந்தந்த முகாம்களில் திரும்ப கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் தந்த தகவலையடுத்து போலீசார் ஜோதிராஜாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், ‘‘முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் உறவினர்களிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி மர்ம நபர்கள் தொடர்ந்து மோசடி செய்து வருகிறார்கள். இப்படி தப்பிச் செல்வது சட்ட விரோதம் என்பதோடு தங்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications