இங்கிலாந்து மாணவர்களின் பாடப்புத்தகத்தில், ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’
இலண்டன்: இங்கிலாந்து மாணவர்காளின் பாடப் புத்தகத்தில் நமது இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு இடம் பெறப் போகிறது.
இங்கிலாந்தில் பள்ளி பயிலும் 5 முதல் 16 வயது மாணவர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் இப்புதிய பாடத்திட்டம் அமைய இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பு நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஒப்புதலுக்குப் பிறகு அறிவிக்கப் பட்டுள்ளது. இப்புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு செப்டம்பர் முதல் அமலில் வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்திற்கு ‘பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் புதிய அத்தியாயம் ‘ என பெயரிட்டுள்ளார் பிரதமர் கேம்ரூன். இதன் மூலம், இங்கிலாந்து 1901ம் ஆண்டு முதல் இன்று வரை கடந்து வந்த பாதை மாணவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இப்புதிய பாடத்திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications