இப்படியெல்லாமா ஒரு எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பிரச்சினை குறித்து பேசாமல் நழுவுவார்??
ரிஷிவந்தியம்: தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், தர்மபுரி, மரக்காணம் விவகாரம் குறித்து எதுவுமே கேட்கக் கூடாது என்று செய்தியாளர்களுக்கு அவரது கட்சியினர் தடை போட்டு விட்டனர்.

மேலும், தனது தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து 8 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 50 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு, குக்கர் உள்ளிட்டவற்றையும் அவர் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரது கட்சிப் பிரமுகர்கள், தலைவரிடம், தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்று ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்து விட்டு செய்தியாளர்களை விஜயகாந்த்தைச் சந்திக்க அனுமதித்தனர்.
இப்படியெல்லாமா ஒரு தலைவர், அதுவும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச நழுவுவார் என்று செய்தியாளர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
4 மாதத்திற்குப் பிறகு
அடிக்கடி தொகுதிக்குப் பக்கம் வராத எம்.எல்.ஏக்கள் வரிசையில் விஜயகாந்த்தை சேர்க்க முடியாதுதான். இருப்பினும் அடிக்கடி வருபவரும் இல்லை.
4 மாதங்களுக்கு முன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார் விஜயகாந்த். அதன் பிறகு இன்றுதான் அவர் ரிஷிவந்தியம் வந்தார்.












Click it and Unblock the Notifications