For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவை பிரித்தால் ராஜினாமா செய்வேன்: முதல்வர் கிரண் குமார் ரெட்டி மிரட்டல்

By Siva
Google Oneindia Tamil News

Kiran Kumar Reddy threants to quit if Andhra gets divided
டெல்லி: தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் விரைவில் நடக்கிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசியுள்ளார். அவர் மாநிலத்தில் உள்ள அரசியல் நிலை குறித்து சோனியாவுக்கு விவரித்துள்ளார்.

மேலும் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அவர் சோனியாவிடம் மிரட்டல் விடுத்தததாக தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க சோனியா ஆர்வமாக உள்ளபோதிலும் அவரது மகனும் காங்கிரஸ் துணை தலைவருமான ராகுல் காந்தி இதற்கு எதிராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையேயே ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது.

English summary
Andhra CM Kiran Kumar Reddy reportedly threatened congress president Sonia Gandhi that if the centre takes a decision on separate Telangana then he would resign his post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X