அணு உலைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்... : உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

Udayakumar
நெல்லை: கூடங்குளம் அணு உலையை கண்டித்து இடிந்தகரையில் இன்று மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என போராட்ட் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக இடிந்தகரையில் ஊர் தலைவர்களுடன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து, உதயகுமார் கூறியதாவது, ‘கூடன்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின் உற்பத்தி தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்களை மின் நிலையமோ, இந்திய அணுசக்தி கழகமோ வெளியிடவில்லை.

மி்ன் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியதை கண்டித்து இடிந்தகரையில் இன்று 13ம் தேதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வரும் 14ம் தேதி சமுதாய தலைவர்களின் கூடடததை கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அணு உலைக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். தொடர்ந்த அறவழியில் போராடுவோம்' என இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+