ஜெ. இட்லி கொடுத்தா.. மமதா சிக்கன் கொடுப்பாராம்...!
கொல்கத்தா: தமிழக மாநகராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை இட்லி உள்ளிட்டவற்றை விற்று வரும் நிலையி்ல் அதே பாணியில் ஒரு திட்டத்தை தனது மேற்கு வங்க மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.
இப்போதெல்லாம் எல்லாமே மலிவாகி விட்டது. மலிவு விலை மது ஒரு காலத்தில் கலக்கியது. இப்போது மலிவு விலை காய்கறிகள், உணவுகள் என சாப்பாட்டு பக்கம் திரும்பி விட்டது அரசியல்வாதிகளின் கவனம்.
முதல்வர் ஜெயலலிதா பெயரில் அதாவது அம்மா உணவகம் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழக மாநகராட்சிகளில் மலிவு விலையில் இட்லி, பொங்கல் உள்ளிட்டவை விற்கப்படுகிறது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
தற்போது இதே பாணியில் மேற்கு வங்கத்திலும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.

மலிவு விலையில் மீன்.. கோழி..
மலிவு விலையில் மீன், கோழி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்கும் திட்டத்தை மமதா அறிவித்துள்ளார்.

வண்டியில் கொண்டு வந்து விற்பார்கள்
மொபைல் வேன்கள் மூலம் இந்த மலிவு விலை மீன், கோழி, காய்கறி, பழங்கள் விற்கப்படும்.

கொல்கத்தா முழுவதும்
இந்தத் திட்டம் கொல்கத்தாவில் அறிமுகமாகி ஹிட் ஆகியுள்ளது.

21 வேன்கள்
கொல்கத்தா முழுவதும் 21 நியாய விலை விற்பனை வேன்கள் தற்போது சுற்றிக் கொண்டுள்ளன.

ஹலால் கோழிங்கோ...
மேலும் தற்போது ரமலான் மாதம் என்பதால் ஹலால் செய்யப்பட்ட கோழிகளை இந்த வேன்களில் விற்கின்றனர். மார்க்கெட் விலையை விட இங்கு விலை குறைவாகும்.
பரவாயில்லை.. நல்ல திட்டம்தான்.












Click it and Unblock the Notifications