தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் கோரிக்கை
நெய்வேலி: தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை உடனே கைவிட வேண்டும் என்று என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்கை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று கூறி என்.எல்.சி. தொழிற்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெய்வேலி கியூ பாலம் அருகில் அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தின் பேரில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டோம். இந்த தகவலை எல்லாம் அரசுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். எனவே, தொழிற்சங்கத்தினர் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications