தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலர் அலுவலத்தில் இன்று காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்களான தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட்டுக்குரிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகா தரப்பில், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி தண்ணீரில் ஏற்கனவே 24 டி.எம்.சி திறக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 10 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை இறுதிக்குள் திறந்துவிடப்படும். மேலும் பருவமழை சரியாக பெய்தால் ஆகஸ்ட் மாதத்திற்கான 50 டி.எம்.சி தண்ணீரும் திறந்துவிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications