மாணவிகளுக்கு பிரசவகால விடுப்பு: கோழிக்கோடு பல்கலை அறிவிப்பு
கோழிக்கோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அளித்துள்ளது கோழிக்கோடுவில் உள்ள காலிக்கட் பல்கலைக்கழகம்.
பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பேறுகால விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. சில மாணவிகள், கல்வி கற்கும் போதே திருமணம் முடிக்கின்றனர். படிக்கும் பருவத்தில் கர்ப்பம் அடைவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
பிரசவத்திற்குப் பின்னர் நீண்ட நாள் விடுமுறை எடுக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவிகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பேறுகால விடுமுறை அறிவித்துள்ளது கேரளாவின் காலிகட் பல்கலைக்கழகம்.
இதனால், ஒரு மாணவி தனது குழந்தைப் பேற்றை முடித்துக் கொண்டு ஆண்டு எந்தப்பிரச்சினையும் இன்றி தேர்வை எழுத வழி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அறிவித்துள்ள ஒரே பல்கலைக்கழகம் காலிகட் பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications