தமிழக அரசுக்கு என்எல்சி பங்குகள் கைமாறுவது எப்போது?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதென பங்கு விற்பனைத்துறை முடிவு செய்து, அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கடந்த மாதத்தில் வழங்கப்பட்டது.
நிறுவனம் சார் ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், பொது மக்களின் பங்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையினால், தற்போது 5 சதவீதத்துக்குப் பதிலாக 3.56 சதவீதம் அல்லது 5.58 கோடி என்.எல்.சி. பங்குகளை மட்டும் விற்பனை செய்யும் முடிவுக்கு பங்கு விற்பனைத்துறை வந்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில், 3.56 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் பங்கு விற்பனைத் துறை செயலாளர் ரவி மாத்தூர் இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி.யில் நடைபெற்றுவந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
இருந்த போதிலும், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் நடைமுறை பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எல்.சி.யில் தற்போது மத்திய அரசுக்கு 93.56 சதவீத பங்குகள் உள்ளன. 10 சதவீத பங்குகள் பொது மக்களிடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 3.56 சதவீத பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே 6.34 சதவீத பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுவிட்டன.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications