தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்- கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகினர்.
இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகே குழுமிய தொண்டர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போராட்டத்திற்கு திருமாவளவன் வரவில்லை. மாறாக பாவரசு தலைமையில் போராட்டம் நடந்தது.
கைது செய்யப்பட்ட 500 பேர் சேப்பாக்கம் அண்ணா கலையரங்குக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications