கூடங்குளம் 2வது அணுஉலை 2014 ஜனவரியில் செயல்படும்: அமைச்சர் நாராயணசாமி
சென்னை: 20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். படிப்படியாக ஒரு மாதத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
கூடங்குளம் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உணவு உத்தரவாத சட்டம்
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் உணவு உத்தரவாத சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் உணவு உத்தரவாத சட்டம் முதலில் அமல்படுத்தப்படும்.
உணவு உத்தரவாத சட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications