துறைமுகத்தில் இருந்து தண்டையார் பேட்டை வழியாக குழாய் மூலம் எண்ணெய் எடுத்து வர தடை
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் எண்ணெய் எடுக்க எண்ணெய் நிறுவனத்திற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது.
அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையில் உள்ளது.
நிலத்தடி நீரில் நனைத்த துணிகளை பற்றவைக்கும் போது அவை பற்றி எரிவதால் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பதை தவிர்பதற்கும், சுத்தமான தண்ணீர் வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீரில் பெட்ரோல் கலந்துள்ளதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் இப்பகுதி நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நிலத்தடி நீரில் எரிபொருள் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவது இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தண்டையார் பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்எண்ணெய் கசிவை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னரே பணியை மீண்டும் தொடரவும் ,பிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, துறைமுகத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக எண்ணெய் அனுப்பும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். உடனடியாக கசிவுகளை சரிசெய்தால் மட்டுமே மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கால அளவுடன் கூடிய திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் சமர்பிக்க வேண்டும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications