கள்ளக்காதலியை ஆசிட் வீசி கொன்ற காதலன்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்ணை அவளது கள்ளக் காதலன், ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் உறவினர்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டம், போர்சா நகரத்தைச் சேர்ந்தவர் ரூபி ராவட், 26. இவருக்கும், சஞ்சு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அம்பா நகரில், வாடகை வீட்டில் குடியேறினர். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான யோகேந்திர தோமர், ரூபியிடம் தன் காதலைத் தெரிவித்தார். ரூபியும் அதற்குச் சம்மதித்ததால், இருவரும், மொரீனா நகர் சென்று தங்கியிருந்தனர்.
சில நாட்களில் தன் தவறை உணர்ந்த ரூபி, யோகேந்திர தோமரை பிரிந்து, ஆக்ராவில் தன் உறவினருடன் வசித்தார். பின், போர்சாவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு, உறவினர் ஜானுவுடன் வந்தார்.
இதை அறிந்த, யோகேந்திரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றார். இரவில், தன் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ரூபி மீது ஆசிட் வீசினார். இதில், ரூபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தனர். பின், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆசிட் வீச்சில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபி நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரின் குடும்ப உறுப்பினர்கள், உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள யோகேந்திர தோமரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையில், ஆசிட் வீச்சுக்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
ஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications