தமிழகத்தில் விரும்பத்தாகத நிகழ்வுகளுக்கு காரணம் பாக் தீவிரவாத இயக்க தூண்டுதலே: இல. கணேசன்
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களில் தூண்டுதலாலேயே தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவின் மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அக்கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் இல. கணேசன் மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் தூண்டுதலால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் டிசம்பர் 6-ந் தேதி தமிழகத்தில் மட்டும் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.
பா.ஜனதா மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11 பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சம்பவத்தில் முதல்வர் எடுக்கும் நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications