சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 47 பேர் பலி, 300 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

மேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள டிங்சி நகர் அருகே இன்று காலை 7.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதில் 47 பேர் பலியாகியுள்ளதாகவும், 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டிங்சி, லோன்கன், டியான்ஷூய் மற்றும் லான்சூ ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது. மீண்டும் ஒன்றரை மணிநேரம் கழித்து 5.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் 21,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. மேலும் 1,200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications