சீனா: சோடா, பென்சில் வாங்கி தருவதாக கூறி 6 சிறுமிகளை கற்பழித்த காமுகனுக்கு மரண தண்டனை
பீஜிங்: சீனாவில், 9 வயதுக்குட்பட்ட 6 சிறுமிகளை பென்சில், சோடா வாங்கித்தருவதாக ஆசைகாட்டி, கற்பழித்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கூலித் தொழிலாளியான சங் குவிங்ஹய், அப்பகுதியில் வாழும் சிறுமிகளுக்கு சோடா, பென்சில் போன்றவை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களை ஏமாற்றி கற்பழித்து வந்துள்ளான். அத்தோடு, தான் சிறுமிகளைக் கற்பழித்ததை தனது செல்போனில் பதிவும் செய்து வைத்துள்ளான்.
குவின்ஹய்யின் இந்த பாதகம் குறித்து தெரிய வந்ததும், அப்பகுதி மக்கள் அவன் பேரில், போலீசில் புகார் அளித்தனர். அதனையடுத்து, அக்காமுகனைக் கைது செய்தனர் போலீசார். விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களனைத்தையும் ஒப்புக் கொண்டான் குவின்ஹய்.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘9 சிறுமிகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய குற்றத்திற்காக குவிங்ஹய்க்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.
இம்மரணதண்டனை தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குவிங்ஹய் கற்பழித்த 6 சிறுமிகளுமே 5 முதல் 9 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications